போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் முல்லேரியா ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு உடன் தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் குறித்த நபர் தொடர்பான தகவல்களை 0718591017, 0718592290, 0718591864 மற்றும் 119 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு வழங்க முடியும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து குறித்த நபர் இன்று (24) அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாகவும், இவர் இடது கால் உபாதைக்கு உள்ளான நபர் ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் திருகோணமலை, மார்பிள் பீச் ரோட், சீனக்குடா பகுதியை சேர்ந்த 41 வயதானமொஹமட் காசிம் மொஹமட் நசீம் என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.