செப்டம்பர் நடுப்பகுதியில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை ரத்து செய்து அதை 20 ஆவது திருத்தத்துடன் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அலி சப்ரி கூறினார்.

நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் 19 ஆவது திருத்தத்தின் உட்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு திருத்தப்படும். அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய 20 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்துவோம் என்று நம்புகிறோம்.

அத்துடன் புதிய வரைவு திட்டங்கள் அமைச்சரவை ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கான வரைவு திட்டத்தின் கீழ், ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கும், அதேநேரத்தில் ஒரு வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் இரண்டு முறை மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.

(கேசரி)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.