இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக ஆடி மூன்று விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. 

தமது இரண்டாம் இனிங்ஸில் 277 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி பட்லர் மற்றும் வோக்ஸ் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் சிறப்பாட்டக் காரராக சகலதுறை ஆட்டக்காரர் வோக்ஸ் தெரிவானார். 

இந்த வெற்றியுடன் இங்கிலாந்து அணி தொடரில் 1-0 என்ற முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி எதிர்வரும் 14ம் திகதி இடம்பெற உள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.