இலங்கை பிரீமியர் லீக் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விளையாட விருப்பம் தெரிவித்து உள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபை சார்பில் முதலாவது ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 28-ம் திகதி முதல் செப்டம்பர் 20-ம் திகதி வரை நடக்க இருக்கிறது. இதில் கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ளை, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்ட 5 அணிகள் கலந்து கொள்கின்றன. 

இந்த அணிகளில் இலங்கையை சேர்ந்த முன்னணி வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்களும் இடம் பெறுகிறார்கள். கடந்த ஜனவரி மாதத்தில் கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்ற இந்திய முன்னாள் 'ஆல்-ரவுண்டர்' இர்பான் பதான், நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் உள்பட 70 வெளிநாட்டு வீரர்கள் ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக்கில் விளையாட விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.