கண்டி மாவட்டத்திலுள்ள புவெலிகட பிரதேசத்திலுள்ள ஐந்து மாடி கட்டிடம்,  வீட்டின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிக்குண்ட ஒன்றரை மாத குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக அஙகிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தின் போது வீட்டில் ஐவர் இருந்துள்ளதுடன் இதுவரை மூவர் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இடிபாடுகளில் சிக்கிய மேலும் இருவரை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தமானது இன்று அதிகாலை 5 மணியளவில்  இடம்பெற்றது.





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.