இருபதாவது அரசியலமைப்பை பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்க பிரஜையான ஒருவர், அமெரிக்க கொடியின் முன்பாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ஒருவர், இலங்கையிலுள்ள சொத்துக்களை சூறையாடிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடிவிட முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இருபதாவது அரசமைப்புத் திருத்தத்துக்கு 2/3 பெரும்பான்மை ஒருபோதும் கிடைக்காதெனவும், அந்த திருத்தத்துக்கு எதிரான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

இந்த திருத்தத்துக்கு ஒருபோதும் 2/3 பெரும்பான்மை ஆதரவு கிடைக்காதன தெரிவித்த அவர்,  அரசாங்கத்துக்குள் உள்ள குழுவினரே 20 க்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

அதனால் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி 20 ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்ட நாள் தொடக்கம் அதற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்திருந்ததெனவும், இனிவரும் காலங்களில் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் அந்த போராட்டம் தொடரும் என அவர் மேலும்  தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.