உன்னைப்போல் யாரும் இருக்கப்போவதில்லை என்று நிச்சயமாய் தெரிகிறது. உனக்கு நீ தான் நிகர். யாரென்று பார்க்கிறீர்களா.. ? வேறு யாருமல்ல. அவள் தான்

*பெண்*

குழந்தையாய் பிறந்து தனது பெற்றோருக்கு தேவதையாய் மிளிர்கிறாள். படிப்படியாக வளர்ந்து, ஆளாகி பெரியவள் என்கிற பட்டத்தை தெரியாமலே அவள் மீது சுமத்தி அவளை திருமணம் என்கிற பந்தத்தில் இணைத்து வாழ்க்கைப் பயணத்தில் ஓடிக் களைக்கு முன்னே தாய் எனும் ஸ்தானத்தை அடைந்து கொள்கிறாள்.. !!!
தனக்கான கனவுப் புத்தகத்தை மூடி வைத்து பிறருக்காய் உன்னை நீயே உருகும் மெழுகாக உருக்கிக் கொண்டிருக்கிறாய்.. புன்னகை சிந்தி பொறுமை எனும் நற்பண்பு கொண்ட பெண்ணே..  

காலத்தால் அழியாத பல வரலாற்று நிகழ்வுகளை தன்னகத்தே கொண்ட பிறவி நீ.. தங்கையாய்... தாரமாய்... 
தாயாய்... 
பல பாத்திரம் படைக்கும் சகலகலா வள்ளி நீ ... காயத்திற்கு மருந்திடும் வைத்தியராய்... கற்பிக்கும் ஆசானாய்...சமையல்காரியாய்... துணி துவைப்பவளாய்... உன் நேரத்திற்கு  பங்காளி நீ... 
புது உலகின்   நவீனம் நீ... 
மொத்தத்தில் பாரதி கண்ட புதுமைப்பெண் நீ... 
அர்ப்பணிப்புக்கள்  புரியும் அனைத்து மகளிர்க்கும் சமர்ப்பணம். 
வாழ்க பெண்மை  
Fayasa Fasil 
Kahatowita 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.