கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இலங்கையில் 15வது மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
56 வயதுடைய குளியாபிடிய, உணலீய பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் குளியாபிடிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் போதே மரணமடைந்துள்ளார்.
இருதய நோயாளியான அவர் கடந்த 14 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 16 ஆம் திகதி நோய் தீவிரமானதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் அவர் இன்று (24) அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக