இலங்கையில் இன்றைய தினம் (04) இதுவரை 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த கடற்படை வீரர் ஒருவர் உட்பட மூவரும், திவுலபிடிய பிரதேசத்தை பெண் மற்றும் அவரது மகளும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த தாயும் மகளும் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.