கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலை தடுப்பதில் அனுபவம்வாய்ந்த சுகாதார நிபுணர்கள் தொற்று நோயியல் பிரிவில் ஆலோசகர்களாக உள்ளனர். அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படுகிறது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இதனால் முழுநாட்டையும் மீண்டும் முடக்க வேண்டிய தேவையில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

மருத்துவச் சங்கத்தின் கோரிக்கைபடி நாட்டை முடக்குவது நல்லதென சிலர் கூறி வருகின்றனர். கொவிட் 19 வைரஸ் சமூக பரவல் அடைந்துள்ளதாக மருத்துவச் சங்கம் கூறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கூட குறிப்பிடுகிறார். மருத்துவச் சங்கம் அவ்வாறு கூறவில்லை. தேவைகளின் படிதான் நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்படுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனம் இந்த வைரஸ் சமூக பரவல் அடைவதற்கான நியமங்களை வெளியிட்டுள்ளது. இதற்கமைவாக தொற்றுநோய் பிரிவு சமூகப் பரவல் அடைந்துள்ளதாக கூறினால் மாத்திரமே இதனை ஏற்றுக்கொள்ள முடியும். அதனையே மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. உலக சுகாததார ஸ்தாபனத்தின் ஆலோசனையின் பிரகாரமே நாம் செயற்படுகின்றோம் என்றும் அசை;சர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (23) வெள்ளிக்கிழமை கொவிட் வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடிகள் தொடர்பாக இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாத்தில் உரையாற்றுகையிலேயே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இந்த ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்தார். 

பிரேரணைக்கு பதிலளித்து சுகாதார அமைச்சர் உரையாற்றுகையில் , இலங்கையில் முதல் நோயாளி கண்டறியப்பட்ட நாள் முதல் பல தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொண்டு முழுநாட்டையும் முடக்கினோம். இன்று நாம் அவ்வாறு முழு நாட்டையும் முடக்க முடியாது. அரசியல்வாதிகளால் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை

உலகில் ஏனைய நாடுகளைவிட கொவிட் 19 வைரஸை தடுப்பதில் வினைத்திறன்மிக்க வகையில் உலகளாவிய அனுபவங்களையும் சுகாதாரத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டே அரசாங்கம் செயற்படுகிறது என்று குறிப்பிட்ட அவர் , விரைவில் கொவிட் 19 வைரஸுக்கான தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதியளிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அதனைப் பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சை தயார்படுத்துமாறும் உலக சுகாதார ஸ்தாபனம் எமக்கு அறிவித்துள்ளது என்றும் கூறினார்.

கொவிட் வைரஸ் தடுப்புக்காக சுகாதாரதுறைசார் ஊழியர்களும் பாதுகாப்புப் படையினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். அதேபோன்று ஏனைய துறைசார் நிறுவனங்களும் அதிகாரிகளும் ஊழியர்களும் இந்த பணியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமைத்துவத்தின் கீழ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் நாம் இதில் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுவருகின்றோம்.. கொவிட் ஒழிப்புகாக இராணுவத் தளபதி தலைமையில் செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் உட்பட பாதுகாப்பு படைகளின் பாரிய ஒத்துழைப்பும் பங்களிப்பும் உண்டு தினமும் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்கள் இன்று உலகில் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார். .

கொவிட் 19 வைரஸ் என்பது உலகளாவிய தொற்று நோயாகும். உலகிற்கு இந்த வைரஸ் புதிதானதாகும். ஆராய்ச்சிகள், அதுதொடர்பிலான செயற்பாடுகளிலும் ஆரம்ப நிலையிலிருந்து தற்போது மிகவும் வளர்ச்சிகண்டுள்ளது என்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

அமெரிக்கா போன்ற உலக வல்லரசு நாடுகள் கூட திக்குமுக்காடும் நிலையில் இந்த அனுவபம் வாய்ந்த நிபுணர்கள் எமக்கு மிகவும் காத்திரமான ஆலோசனைகளை வழங்குகிவருகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.