இலங்கையில் இன்றைய தினம் (23) மேலும் 03 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இலங்கையில் கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் பதிவான மரணங்களில்,

ஒருவர் ஹெய்யன்துடுவ (கம்பஹா மாவட்டம்) பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய பெண் என்றும் இவர் நேற்றைய தினம் (22) ஐடிஎச் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நபர் கொழும்பு 15, மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் எனவும் இவர் இன்றைய தினம் ஹோமாகமை வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நபர், கொழும்பு 14 இனை சேர்ந்த 60 வயதுடைய பெண் எனவும் இவர் இன்றைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.