இலங்கையில் மேலும் 03 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேற்படி மூன்று மரணங்களும் நேற்று (15) பதிவாகியிருப்பதுடன் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 157 ஆக உயர்வடைந்துள்ளது.
- கொழும்பு 14 இனை சேர்ந்த 60 வயதான பெண் தனியார் வைத்திசயாலை ஒன்றில் நேற்று முன்தினம் (14) மரணித்துள்ளார்.
- கொழும்பு 15 இனை சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 12 ஆம் திகதி வீட்டில் மரணித்துள்ளார்.
- கொழும்பு 15 மட்டக்குளியை சேர்ந்த 84 வயதான ஆண் கடந்த 12 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது மரணித்துள்ளார்.
கருத்துரையிடுக