இன்றைய தினம் (20) 05 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாட்டில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 176 ஆக உயர்வடைந்துள்ளது.
விபரம்:
- பனாகொடை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான ஆண் நேற்று முன்தினம் (18) முல்லேரியா வைத்தியசாலையில் மரணித்துள்ளார்.
- கொழும்பு 08 இனை சேர்ந்த 52 வயதான ஆண் கடந்த 17 ஆம் திகதி வீட்டில் மரணித்துள்ளார்.
- கொழும்பு 12 இனை சேர்ந்த 71 வயதான பெண் நேற்று (19) பிம்புர ஆதார வைத்தியசாலையில் மரணித்துள்ளார்.
- கொழும்பு 02 இனை சேர்ந்த 44 வயதான ஆண் நேற்றைய தினம் (19) வெலிசறை வைத்தியசாலையில் மரணித்துள்ளார்.
- பண்டாரகமை பிரதேசத்தை சேர்ந்த 49 வயதான ஆண் நேற்று (19) ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது மரணித்துள்ளார்.
கருத்துரையிடுக