இன்றைய தினம் (08) இதுவரை 797 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் 567 பேர் பேலியகொடை கொத்தணியில் இருந்தும் 230 பேர் சிறைச்சாலை கொத்தணியில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மினுவாங்கொடை, பேலியகோடை மற்றும் சிறைச்சாலை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 25,822 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக