2021 முதல் அரச ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாளாவது பத்திக் ஆடையை அணிந்து, கடமைகளுக்கு சமூகமளிக்குமாறு, பத்திக் கைத்தொழில் மற்றும் தேசிய ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அரச பணியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய ஆடை உற்பத்தியைப் பாதுகாத்தல், தேசிய ஆடைத்துறையில் புதிய தொழில்வாய்ப்பு தலைமுறை மற்றும் ஆடைகளுக்காக வருடாந்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் உள்ளுர் பரிமாற்றத்தை தடுக்கும் நோக்கில் இந்தக் கோரிக்கையை விடுப்பதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அரச பணிகளில் ஈடுபட்டுள்ள 3 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் ஒத்துழைப்பை இதற்காக வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.