நாளை (28) அதிகாலை 5.00 மணி முதல் கொழும்பு மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதுடன், மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை அதிகாலை 5.00 மணி முதல் கொழும்பில் டேம் வீதி, வாழைத்தோட்டம், மருதானை பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் விடுவிக்கப்படும்.

அத்துடன் கொம்பனி வீதி பிரதேசத்திலுள்ள வேகந்த, ஹூனுப்பிட்டிய கிராம சேவகர் பிரிவுகளும் நாளை அதிகாலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும்.

இது தவிர, வௌ்ளவத்தையில் மயூரா பிளேஸ், வெல்லம்பிட்டியிவில் லக்சத செவன வீடமைப்புத் திட்டம் மற்றும் பொரளையில் ஹல்கஹவத்தை மற்றும் காளிபுள்ளே வத்தை ஆகிய பிரதேசங்களும் நாளை அதிகாலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும்.

மேலும் வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதுக்கடை மேற்கு, கிழக்கு ஆகிய கிராம சேகவர் பிரிவுகளில் நாளை அதிகாலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் எனவும்  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.