உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸ் மருந்து எதனையும் இதுவரை அங்கீகரிக்காததன் காரணமாக கூடியவிரைவில் இலங்கைக்கு கொரோனா வைரஸ் மருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கமுடியாது என கொவிட் 19 கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளதாக அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கொரோனா வைரஸ் மருந்தினை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து மருந்துகளும் இன்னும் சோதனை நிலையிலேயே உள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனம் எந்த மருந்திற்கும் இன்னமும் அனுமதி வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர், உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரமளித்ததும் மிகச்சிறந்த மருந்தினை இலங்கை அரசாங்கம் தெரிவு செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மருந்துகள் குறித்த முக்கியமான விஞ்ஞான ரீதியிலான தரவுகள் இலங்கைக்கு இன்னமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை இலங்கை நம்பியிருக்க வேண்டியுள்ளது. இலங்கை நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் அதேவேளை கொரோனா வைரஸ் மருந்துகளிற்கு அனுமதியளிப்பதற்கு இன்னமும் சில வருடங்களாகும் என்பதையும் அறிந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.