தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இளைஞர்களை வலுப்படுத்தி சிறந்த தலைமைத்துவம் உள்ள நாளைய தலைவர்களை உருவாக்கும் செயல்திட்டமான இளைஞர் பாராளுமன்றமானது கடந்த 1ஆம் 2ஆம் திகதிகளில் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.
இலங்கை சோசலிச குடியரசின் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா பிரதம அதியாக கலந்து கொண்டு இளைஞர் பாராளுமன்றத்தினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். அமைச்சர்களின் தெரிவு ஆரம்பத்தில் நடைபெற்று முடிந்திருந்த நிலையில் அனைவருக்குமான சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்த சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.
(RH)
கருத்துரையிடுக