தற்போதைய கொரோனா தொற்றின் காரணமாக, விமானப்பயணிகள் நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதியை வழங்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, அதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

21ஆம் திகதி இரவு 11:59 மணிமுதல், மே மாதம் 31ஆம் திகதி இரவு 11:59 மணிவரையிலும் இத்​தடை அமுலில் இருக்கும். இக்காலப்பகுதியில் எந்தவொரு விமானப் பயணியும் நாட்டுக்குள் நுழைவதற்கு அனுமதி  கிடைக்காது

இது தொடர்பிலான அறிவிப்பை, சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ, நேற்று (19) விடுத்தார்.

“எனினும், மேலே குறிப்பிடப்பட்ட காலப்பகுதிக்குள், நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும் விமானப் பயணிகளுக்கு எவ்விதமான தடையும் இல்லை” என்றார்.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.