எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (18) பிற்பகல் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்பி, பொருளாளர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா எம்பி, பிரதி தேசிய அமைப்பாளர் புத்திக பத்திரன எம்பி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்பி, ஐக்கிய மக்கள் சக்தியின் சட்ட விவகார செயலாளர்களான ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காஸிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்த கருத்துக்கள்:
போர்ட் சிட்டி சட்டம் சமீபத்தில் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் வரலாற்றைப் பார்க்கும்போது, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இதை 2015 க்கு முன்னர் சீனாவுக்கு முற்றிலுமாக விற்றது. நல்லாட்சியில் அதை 99 ஆண்டுகளாக குத்தகை அடிப்படையில் மீண்டு மீள வழங்க முடிந்தது.
மீண்டும் கோத்தா, மஹிந்த அரசாங்கம் தற்போது புதிய ஆணைக்குழு சட்டமூலம் ஊடாக மீண்டும் இலவசமாக சீனாவிற்கு வழங்க முற்பட்டது.நாட்டுப் பற்று கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியும் இன்னும் பிற அமைப்புகளும் நீதிமன்றத்தை நாடியதால் நாட்டிற்கு சாதகமான முடிவுகளை நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
இதற்காக நீதிமன்றத்திற்காக எமது நன்றிகளை தெரிவிக்கிறோம்.25 சட்டங்கள் தொடர்பாக தமது நிலைப்பாடுகளை வெளியிட்டுள்ளது. அதில் 16 சரத்துக்கள் மூன்றில் இரண்டு பெருன்பான்மையுடனும் மற்றும் 09 சரத்துக்களை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்பினூடாகவும் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த எதிச்சதிகார போக்கை ஐக்கிய மக்கள் சக்தியால் ஜனநாயக ரீதியாக தோற்கடித்தோம். தனி சட்டத்தின் கீழ் ஒரு தனி நாட்டை ஆட்சி செய்ய முயன்ற இந்த அரசாங்கத்தின் செயலுக்கு எதிராக பல கட்சிகள் நீதிமன்றத்திற்கு சென்றன. கோத்தாபய ராஜபக்ச கொண்டு வந்த இந்த மசோதாவை ரத்து செய்ய எங்களால் நடவடிக்கை எடுக்க முடிந்தது. அது மட்டுமல்லாமல், ஒரு பகுதி நிலத்தை ஃப்ரீஹோல்டர்களுக்கு விற்பதை நிறுத்த முடிந்தது ஒரு எதிர்க்கட்சியாக, ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் உதவியுடன் அரசாங்க கொண்டு வந்த சட்டத்தை இரத்து செய்ய முடிந்தது. இந்த முறையும் வாரத்தில் ஒரு நாளை மாத்திரம் விட்டு விட்டு மீதி ஆறு நாட்களையும் விடுமுறையாக்கி நீதிமன்றம் செல்லும் அவகாசத்தைக் குறைக்க சூட்சுமமாக திட்டமிட்டனர்.
நாட்டை மூடிவிட்டு பயண கட்டுப்பாடுகளை நிறைவேற்ற சென்றார்கள். நமது நாட்டைப் பாதுகாக்க, நாட்டின் ஒரு பகுதியின் உரிமையை சீனாவுக்குக் கொடுப்பதை நிறுத்த நடவடிக்கை எடுத்ததற்காக உச்ச நீதிமன்றத்திற்கும் ஆக்கபூர்வமாக ஈடுபட்ட சட்டத்தரணிகளுக்கும் எனது நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன். (Siyane News)
විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්ය හමුව සජීවීවවිපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්ය හමුව සජීවීව
Posted by Samagi Jana Balawegaya on Tuesday, May 18, 2021
கருத்துரையிடுக