பிரபல தொழிலதிபர் ஷப்பீர் அப்பாஸ் குலாம் ஹுசைனின் மகனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், இன்று கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தொழிலதிபர் ஷப்பீர் அப்பாஸ் குலாம்ஹுசைனின் கொலை தொடர்பாகவே அவருடைய மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் திகதியன்று அன்று, ஷப்பீர் அப்பாஸ் குலாம்ஹுசைன் கொழும்பில் உள்ள அவரது அலுவலக வளாகத்தில் காலமானார்.

2018 ஆம் ஆண்டு சிஐடியின் பொது முறைப்பாட்டுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் சந்தேகத்துக்கிடமான மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. 

குலாம்ஹுசைனின் உடல் 2019 இல் தோண்டியெடுக்கப்பட்டது மற்றும் அவரது எச்சங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

அதன்படி, அவரது மரணம் இயற்கையான காரணங்களால் ஏற்பட்டது அல்ல என்றும் ஒரு கொலைதான் என்றும்  வைத்தியர்கள் அறிக்கையிட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பான நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொலை தொடர்பாக தொழிலதிபரின் 37 வயது இளைய மகன் அலி குலாம் ஹுசைனை சிஐடி கைது செய்துள்ளது.

கொலை நுட்பமாக திட்டமிடப்பட்டது மற்றும் இறுதிச் சடங்குகள் இளைய மகனால் இயற்கையான மரணம் போல காட்டப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்தது.

பாதிக்கப்பட்டவரின் மகன் சொத்து பெறும் நோக்கத்தில் கொலை செய்ததாக சிஐடி சந்தேகிக்கிறது.

அத்துல் கோட்டையைச் சேர்ந்த சந்தேகநபர், கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு செப்டம்பர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.