ஆளும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட இன்று சபாநாயகர் முன்னிலையல்  பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

இதற்கு முன்னரும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த இவர் தற்போதைய நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்காக தன்னுடைய பதவியை இராஜினாமா செய்ததுடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக பதவி ஏற்பதற்காக தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாக செய்ததனை அடுத்து மீண்டும் இவர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.