யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையும் ,நன்னிலை மையமும் இணைந்து நடாத்தும் “இளையோர் உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளினாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக சர்வதேச ரீதியில் இடம்பெறவுள்ளது.
இவ் உரையாடலானது 33வது வாரமாக சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இவ் உரையாடலினை மெய்யியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ந.சிவகரன் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் தலைமையிலும் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வானது மெய்யியல் துறை மாணவர்களினாலும் பிற துறையில் கற்றுவரும் மாணவர்களினாலும் நம் நாட்டில் நடைபெறுகின்ற சமகாலப் பிரச்சினைகளை மையப்படுத்தியதாகவும் அப் பிரச்சினைகளை மெய்யியல் கருத்துக்களோடு தொடர்புபடுத்தியும் மெய்யியல் ரீதியான சிந்தனையை மையப்படுத்தியதாகவும் இவ் உரையாடலானது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலமையாளார்களும் பிற பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து இவ் இணையவழி நிகழ்வினை சிறப்பித்துக் கொண்டு இருக்கின்றனர்.
மேலும் இவ் வாரம் இந்த நிகழ்வில் சர்வதேச ரீதியில் பல மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.ஜே.மிதுனி சாகா(மெய்யியல் துறை,களனிப் பல்கலைக்கழகம்) -உலகக் குடிமகனாக எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் மற்றும் ,ஏ. எம் பாத்திமா இஃப்ரத் நுஹா( முதலாம் வருடம்,அக்டிவ் சிட்டிசன், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ) -ஆக்கபூர்வ சிந்தனை பற்றியும் ,எவ்வாறு யோசனையை உருவாக்குகிறது என்றும், ஆர்.ஜோஷிகா(முதலாம் வருடம், கணினி தகவல் தொழினுட்ப துறை,ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்) -புதிய தொழில்நுட்பங்களை சமாளிப்பது தொடர்பிலும், வி.வித்தியாஷினி(இரண்டாம் வருடம்,பொதுநலத் துறை,ஆசியன் பல்கலைக்கழகம் பங்களாதேஷ்) - மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் ஆகிய தலைப்புக்களில் பங்கேற்று உரையாற்ற தயாராக உள்ளனர்.இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக அவுஸ்ரேலியாவின் எம்.ஏ மோனாஷ் பல்கலைக்கழகத்தின் அவுஸ்திரேலிய விருது பெற்ற பேராசிரியர் த்ரிஷ்யா குருங் அவர்கள் கலந்துகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றினால் சமூகத்தின் பல்வேறு கட்டமைப்புகளும் முடக்கம் கண்டிருக்கும் தற்போதைய சூழலில், நேரடியாக பங்கேற்க முடியாத சந்தர்ப்பத்திலும், இணையவழியாக Zoom செயலி ஊடாக இந் நிகழ்வானது மக்களின் மத்தியில் பலத்த ஆதரவைப் பெற்று இவ்வாரமும் நடைபெறுகின்றது.
இந்த உரையரங்கில் Meeting ID: 63106299899 passcode:Youth@2021 என்ற அடையாளத் தரவை அளிப்பதனூடாக உள்நுழைந்து பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக