அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி ஞாயிற்றுக்கிழமை (10) கொழும்பு துறை முகத்தை வந்தடையவிருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கண்டி பிரதேசத்தில்  இடம்பெற்ற நிகழ்வில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,இந்த அரிசி சதோச மற்றும் அங்காடி வர்த்தக நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ ரூபா 100 க்கு குறைவாக பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் கூறினார்.

இதேவேளை ,எதிர்வரும் காலப்பகுதியில் மேலும் சில அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.