பெற்றோல் நெருக்கடியால் பிறந்து 3 நாட்களேயான பச்சிளம் குழந்தை பலி

Rihmy Hakeem
By -
0

 


M.F.M.Ali

ஹல்துமுல்ல பகுதியில் முச்சக்கரவண்டிக்கு, பெற்றோல் கிடைக்கப்பெறாமையினால் பிறந்து 3 நாட்களேயான சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 19ஆம் திகதி பிறந்த குறித்த சிசுவும் தாயும் சிறந்த நலத்துடன் இருந்தமையினால் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

எனினும், குறித்த சிசுவுக்கு குருதியில் சீனியின் அளவு குறைந்து, மஞ்சள் நிறமாக மாறி திடீர் சுகயீனம் ஏற்பட்டதால், வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு பெற்றோர் முயற்சித்துள்ளனர்.

இதன்போது, முச்சக்கரவண்டிக்கு பெற்றோலை பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்த போதும், அது பலனளிக்கவில்லை.

பின்னர், பெற்றோர் குறித்த சிசுவை ஹல்துமுல்ல வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)