க/எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு பாடசாலையின் பழைய மாணவர் சங்கமும், சங்கத்தின் விளையாட்டு மற்றும் திறன் அபிவிருத்தி குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த எனசல்கொல்ல பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ECC ரெட் வின்ங்ஸ் அணியினர் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர். 

இறுதிப்போட்டியில் ECC டைடான்ஸ் அணியை வீழ்த்தியே ECC ரெட் வின்ங்ஸ் அணியினர் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர்.

20 அணிகள் பங்குபற்றிய மேற்படி தொடர் கடந்த ஜுலை மாதம் 16 மற்றும் 17ம் திகதிகளில் மெதகெகில ஸ்ட்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழக பொது மைதானத்தில் இடம்பெற்றது. 

இதன் போது பாடசாலையின் 2005/08 வகுப்பு மாணவர்களால் கல்லூரியின் தேவை உணர்ந்து ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஒலிபெருக்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









கருத்துரையிடுக

Blogger இயக்குவது.