100,000 மெட்ரிக் டொன் மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று இன்று (13) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ள அவர், அவை நாளை தரையிறக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 120,000 மெட்ரிக் டொன் மசகு எண்ணெய் தாங்கிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 23 முதல் 29ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டு மசகு எண்ணெய் கப்பல்களும் ரஷ்யாவில் இருந்து அனுப்பப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.