(எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்)

இளைஞர்களுக்கான நான்காம் கட்ட  இலவச நீச்சல் பயிற்சி முகாம் இன்று 16.10.2022ம் ஞாயிற்றுக்கிழமை காயாங்கேணி கடற்கரையில்  கல்குடா டைவர்ஸ் அணியின் ஏற்பாட்டில் “ஶ்ரீலங்கா லைப் காட்” வழிகாட்டலுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதன் போது ஏறாவூர்,கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த தொடர்சியாக நீச்சல் பயிற்சியை கற்றுக் கொள்வதற்காக இளைஞர்கள் வருகை தந்திருந்தனர்.

இன்று காலை 7:30 தொடக்கம் மதியம் 12.00 மணிவரை இடம்பெற்ற இந்நிகழ்வை அமைப்பின் ஏற்பாட்டாளர்களும் சமூக சேவை உதவியாளர்களுமான ஏ.சீ.எம்.நியாஸ்தீன் ஹாஜியார், எச்.எம்.ஹிப்ஜாத், ஜௌபர் மெக்கானிக் ஆகியோர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

“கல்குடா டைவர்ஸ்” அணியின் விஷேட சுழியோடிகள் கலந்து கொண்டவர்களுக்கு நீச்சல் பயிற்சிகளை வழங்கினார்.

பங்குபற்றிய அனைவருக்கும் நீச்சல் பயிற்சியின் முக்கியத்துவம், அதனால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டது.

அத்தோடு, அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் இடம்பெறும் நீர் அனர்த்தங்களின் போது நீரில் மூழ்குபவர்களை மீட்கும் பணிகளையும் கல்குடா டைவர்ஸ் அணியினர் களத்தில் நின்று பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், எதிர்வருங்காலங்களில் இன்னும் சிறப்பான முறையில் அதிகமான இளைஞர்களுக்கு நீச்சல் மற்றும் உயிர்காக்கும் பயிற்சிநெறிகளை வழங்கவுள்ளதாகவும் இவ் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.