9 ஏ பெறுபேற்றை பெற்ற பாடசாலை மாணவனை  மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம்!

அம்பிட்டிய பிரதேசத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர் ஒருவரை நபரொருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியாமையினால் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் கவலைக்கிடமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் தெரிவிப்பதாவது கடந்த சனிக்கிழமை இரவு, பரீட்சை பெறுபேறுகளை தெரிவிப்பதற்காக உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த போது மற்றுமொரு நபருடன் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டிருக்கின்றது.

இதன் போது கோபம் கொண்ட நபர் மாணவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட மாணவனின் தந்தையிடம் கப்பம் கேட்டு, கொடுக்காததால் மாணவன் மீது இவ்வாரான தீவைப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட மாணவனின் தந்தையிடம் இது விடயமாக பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டபோது மகனுக்கு தீயிட்டவரை அடையாளம் காட்ட முடியாது என பொலிசாரிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இருப்பினும், அம்பிட்டிய பிரதேசத்தை அச்சுறுத்தும் கும்பலொன்று இந்த கொடூர செயலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள பிரதேசவாசிகள், குறித்த கும்பலுக்கு பயந்து மாணவனின் குடும்பத்தினர் தகவல்களை வெளியிடுவதில் தயக்கம் காட்டுவதாக  தெரிவித்திருந்தனர்.  

இந்த கும்பல் ஹெரோயின், ஐஸ்,கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் அளித்தும் எவ்வித பயனும் இல்லை எனவும், தகவல் கொடுப்பவர்கள் தொடர்பில் உடனடியாக பொலிஸார் கும்பலுக்கு தெரிவிப்பதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதற்கு முன்னர் அம்பிட்டிய பிரதேசத்தில் ஒருவரை  சிலுவையில் அறையப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், அம்பிட்டிய தம்பவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பட்டுள்ளனர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.