இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனுஷ்க குணதிலக்க மீது 4 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் பிணை கோரி சிட்னி நீதிமன்றத்தில் இன்று (7) கைவிலங்குடன் காணொளி மூலம் ஆஜரானார்.

தனது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே பேசிய குணதிலகா, டவுனிங் சென்டர் லோக்கல் நீதிமன்றில் ஒரு திரையில் காட்டப்பட்டார்.

அவர் ஒரு வெளிநாட்டுப் பிரஜை என்பதன் அடிப்படையில் அவருக்கு பிணை மறுக்கப்பட்டது, மேலும் அவர் வழங்கிய முகவரியில் அவர் இருப்பதாக அவர்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று தனுஷ்க குணதிலக்கவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

அவர் ஒரு திருத்த மையத்தில் வைக்கப்படுவார் என அறிய முடிந்தது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.