டுபாயில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பல இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவியை யக்கல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த தம்பதி தெமட்டகொட பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 30 வயதுடைய இந்த தம்பதி யக்கல மற்றும் கம்பஹா பிரதேசங்களில் மக்களை ஏமாற்றி இலட்சக்கணக்கான பணத்தை பெற்றதாக யக்கல பொலிஸாருக்கு 9 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு பகுதிகளில் வாடகை அடிப்படையில் கிடைத்த வீடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில், சந்தேகமடைந்த தம்பதியினர் டுபாய்க்கு அனுப்பி வைப்பதாக கூறி பணத்தை ஏமாற்றியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.