பண்டிகையை முன்னிட்டு 5 நாட்களுக்கு மின்வெட்டு இல்லை!

எதிர்வரும் பண்டிகை காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, டிசம்பர் 24, 25, 26, 31 மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இன்று மற்றும் நாளைய தினம் 2 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை அமுல்படுத்த பொதுப் பயன்பாடு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.