புதிய மின்சார விலைச்சூத்திரத்தின்படி, முதல் 30 யூனிட்டுகளுக்கான கட்டணம் 8ல் இருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும், அதன்படி, முதல் 30 யூனிட்டுகளுக்கு ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 3,000 ரூபாய் கட்டணத்துடன் 1,500 ரூபாய் நிலையான கட்டணமாக வழங்கப்படும் என ஆனந்த பாலித நேற்று (டிசம்பர் 18) தெரிவித்தார்.
மின்சாரக் கட்டண திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்த அவர், இது முற்றிலும் கறுப்புச் சந்தை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.