முல்லைத்தீவு மாஞ்சோலை பகுதியில் மாணவி ஒருவர் வாகனத்தில் இருந்து குதித்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவி படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த 23ஆம் திகதி முறிப்பிலிருந்து மாஞ்சோலை செல்வதற்காக பஸ்ஸில் சென்ற போது மாணவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தும் பஸ் நிற்காமல் சென்றுள்ளது.

இந்த நிலையில் நீராவிப்பிட்டி முதன்மை வீதியில் பஸ் பயணித்துக்கொண்டிருக்கும் போது வாகனத்தில் இருந்து மாணவி குதித்துள்ளார். பஸ்ஸில் இருந்து குதித்தது கூட தெரியாத நிலையில் பஸ் சாரதி பஸ்ஸை ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்த விபத்தில் தலையில் படுகாயமடைந்த முறிப்பு பகுதியினை சேர்ந்த 15 வயதான குறித்த மாணவி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.