எதிர்வரும் பண்டிகை காலத்தில் மரக்கறி வகைகளின் விலைகள் உச்சத்தை அடையும் என்று மரக்கறி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த ஹெட்டியாராச்சி இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

தேவைக்கு ஏற்ப சந்தைப்படுத்துவதற்கு மரக்கறி உற்பத்தி தற்போது போதுமானதாக இல்லை.

நாட்டின் விவசாயத்துறையை ஆட்சியாளர்கள் நாசமாக்கியுள்ளனர்.

தற்போது உள்நாட்டு உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 450 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், அதற்கு ஏற்ப கரட், போஞ்சி உள்ளிட்ட மரக்கறிகளும் கடுமையாக விலையுயர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.