சம்மாந்துறை திராஸாத்துல் இஸ்லாமிய்யா அரபு கலாபீடத்தின் முழு நேர பெண்களுக்கான பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு

சம்மாந்துறை திராஸாத்துல் இஸ்லாமிய்யா அரபு கலாபீடத்தின் முழு நேர பெண்களுக்கான பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு இன்று  திராஸாத்துல் இஸ்லாமிய்யாவின் நிறைவேற்று பணிப்பாளரும் , சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவருமான அல்-ஹாஜ் KMKA. றம்ஸீன் காரியப்பர் தலைமையில் கலாபீடத்தின் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. 

இக்கலாபீடத்தில் அதிகமான மாணவர்கள் அல்-ஆலிமா மார்க்க கல்வியை தொடர புதிதாக இணைக்கப்பட்டதை தொடர்ந்து, திராஸாத்துல் இஸ்லாமிய்யாவின் அடுத்த மைல்கல்லான பெண்களுக்கான முழுநேர பாடநெறியின் முதலாவது கன்னி நிகழ்வாக இது அமைந்திருந்தது.

அதிதிகள் வரிசையில் பிரதம பேச்சாளராக முன்னால் அல்-மனார் கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரும் தற்போதய ரைஸ் சிறிலங்கா அமைப்பினுடைய தலைமை நிறைவேற்று பணிப்பாளருமான அஷ்-ஷெய்க் A. அக்ரம் (நழீமி) பிரதம பேச்சாளராக கலந்துகொண்டார். 

மேலும் OCD அமைப்பின் தலைவரும்  விஞ்ஞான முதுமானியும் சமூக சேவையாளர் அஸ்மி யாஸீன்  மேலும் நிர்வாகிகள், உலமாக்கள், புத்திஜீவிகள், பழைய மாணவர்கள்,  கல்விசார் ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டதோடு பகல் போசனத்தோடு நிகழ்வு நடைபெற்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.