நாட்டு முஸ்லிம்களுக்கு ஜம்இய்யத்துல் உலமா சபை உருக்கமான வேண்டுகோள்!

இலங்­கையில் மீண்டும் ஐ.எஸ் அடிப்­ப­டை­வா­தத்தைப் பரப்பும் வகை­யி­லான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இது தொடர்­பான Voice of Khurasan எனும் இலத்­தி­ர­னியல் சஞ்­சிகை சமூக வலைத்­த­லங்­களில் வைர­லாக்­கப்­பட்டு வரு­கி­றது. இது தொடர்பில் விரை­வாக உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு வேண்­டிக்­கொள்­கிறோம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பொலிஸ்மா அதி­பரைக் கோரி­யுள்­ளது.

Voice of Khurasan எனும் இலத்­தி­ர­னியல் சஞ்­சி­கையின் இலத்­தி­ர­னியல் பிர­தி­யொன்றும் பொலிஸ்மா அதி­ப­ருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், குறிப்­பிட்ட ஆபத்­தான நிலைமை தொடர்பில் விரி­வாக விசா­ரணை நடாத்தி குறிப்­பிட்ட இலத்­தி­ர­னியல் சஞ்­சி­கையை வெளி­யிட்­ட­வர்கள், மற்றும் விநி­யோ­கிப்­ப­வர்கள், சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை இனங்­கண்டு உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறும் உலமா சபை பொலிஸ்மா அதி­ப­ரைக் ­கோ­ரி­யுள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் இளைஞர் விவ­கார பிரிவின் இணைப்­பாளர் அஷ்ஷெய்க் நுஸ்ரத் நவுபல் பொலிஸ்மா அதி­ப­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்ளார். கடி­தத்தின் பிர­திகள் கொழும்பு குற்­ற­வியல் விசரணை பிரிவுக்கும் பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரி­வி­ன­ருக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இதேவேளை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி மற்றும் செய­லாளர் அர்கம் நூராமித் ஆகியோர் கையொப்­ப­மிட்டு உல­மாக்­க­ளுக்கும் மஸ்ஜித் நிர்­வா­கி­க­ளுக்கும் மற்றும் சமூக தலை­வர்­க­ளுக்கும் வேண்டுகோளொன்­றி­னையும் முன்­வைத்­துள்­ளனர்.

குறிப்­பிட்ட வேண்­டு­கோளில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; சமீப காலத்தில் ஆங்­கில மொழியில் இஸ்­லாத்­துக்கு முர­ணான தீவிரவாத மற்றும் பயங்­க­ர­வாத சிந்­த­னை­களை வரவேற்கக் கூடி­ய­தா­கவும் அதனை மேற்­கொண்­ட­வர்­களை புக­ழக்­கூ­டிய விதத்திலும் ஓர் இலத்­தி­ர­னியல் சஞ்­சிகை பரவி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. சில தீய சக்­திகள் இத­னைப்­ப­ரப்பி இஸ்லாத்தையும் முஸ்­லிம்­க­ளையும் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தற்கும், முஸ்­லிம்­களும், இஸ்­லாமும் இலங்­கைக்கு எதி­ரா­ன­வர்கள் என சித்­த­ரிக்­கவும் முயற்­சிக்­கி­றார்கள். இது தொடர்பில் பொலிஸ் மா அதி­ப­ருக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான கால­கட்­டத்தில் எமது சமூ­கத்தையும் நாட்­டையும் பாது­காப்­பது எமது கட­மை­யாகும். அதனால் இந்த நாட்டில் எமது முன்­னோர்கள் முஸ்ஸிம் சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு மேற்­கொண்ட பங்­க­ளிப்­புகள் போன்று இன்றும் நாம் பங்களிப்புக்களை  மேற்­கொள்ள வேண்டும். இஸ்­லாத்­துக்கு முர­ணான இஸ்­லாத்தின் பெயரில் பகி­ரப்­படும் கருத்­துக்­க­ளி­லி­ருந்து அனை­வரும் மிக ஜாக்­கி­ர­தை­யா­கவும், ஒற்­று­மை­யா­கவும் செயற்­பட்டு நாட்­டுக்கும் மனித சமு­தா­யத்­துக்கும், இஸ்­லாத்­துக்கும் பங்­க­ளிப்பு செய்­யக்­கூ­டிய ஒரு சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்ப உதவி புரி­யு­மாறு அன்­புடன் வேண்­டிக்­கொள்­கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.