இன்று(22) முதல் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

போதுமான அளவு ஆசிரியர்கள் விண்ணப்பிக்காமை காரணமாக விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். 

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பான சிக்கல் இதற்கு காரணமாகியுள்ளது. 

க.பொத.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.