இன்றைய வானிலை முன்னறிவிப்பு

 கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

*பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்.*

👉அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை

👉மட்டக்களப்பு - அடிக்கடி மழை பெய்யும்

👉கொழும்பு - பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

👉காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

👉யாழ்ப்பாணம் - சிறிதளவில் மழை பெய்யும்

👉கண்டி - பிரதானமாக சீரான வானிலை

👉நுவரெலியா - பிரதானமாக சீரான வானிலை

👉இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

👉திருகோணமலை - அடிக்கடி மழை பெய்யும்

👉மன்னார் - பிரதானமாக சீரான வானிலை

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.