கட்டுக்குருந்தை பிரதேச வாழ் மக்களை ஒன்றிணைக்கும் திட்டம் ; யுனைடட் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் கிரிக்கட் சுற்று!



களுத்துறை கட்டுக்குருந்தை யுனைடட் விளையாட்டுக் கழகம் கட்டுக்குருந்தை பிரதேசத்தில் வாழும் மற்றும் அப்பிரதேசத்தில் வாழ்ந்து தற்போது வேறு இடங்களில் குடியிருக்கின்ற உறவுகளை மீண்டும் ஓன்றிணைத்து தமக்கிடையே பரஸ்பரம் தமது கடந்த கால நினைவுகளை மீட்டியபடி புரிந்துணர்வை ஏற்படுத்துவதை நோக்ககக் கொண்டு இரண்டாவது வருடமாக நடாத்திய கிரிக்கட் சுற்றுப் போட்டி கடந்த 19 /03 /2023 அன்று களுத்துறை வெட்டுமக்கட பாகிஸ்தான் மைதானத்தில் நடாத்த நடைபெற்றது. 10 அணிகளுக்கிடையில்  இடம்பெற்ற சுற்றுப்போட்டியில் கட்டுக்குருந்த றொயல்ஸ் அணி வெற்றிபெற்றது. இப்போட்டிகளில் கட்டுக்குருந்தை பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்களும்   இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் அவர்களும் விளையாடியதோடு வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்களால் வெற்றிக் கேடயம் வழங்கி வைக்கப்பட்டது. களுத்துறை நகர சபை முன்னால் தலைவர் ஆமிர் நஸீர் நகர சபை உருப்பினர் ஹிஷாம் ஸுஹைல் மற்றும் அன்பார் ஜெளபர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.