மூன்றாவது முறையாக சீன ஜனாதிபதியாக பதவியேற்றார் ஜி ஜின்பிங்

சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் பதவியேற்றார் .

தேசிய மக்கள் காங்கிரசின் ஏறக்குறைய 3,000 உறுப்பினர்கள் ஒருமனதாக அவருக்கு வாக்களித்துள்ளனர். தேர்தலில் வேறு யாரும் போட்டியிடவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், சீனாவின் மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவராகவும், ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

சீன பாராளுமன்றத்தின் தலைவராக ஜாவோ லெஜியும், புதிய துணை ஜனாதிபதியாக ஹான் ஜெங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

தொடர் வெற்றிகளுடன், சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக ஜி ஜின்பிங் மாறி வருகிறார். 

இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக முடியும் என்ற வரம்பை கடந்த 2018-ம் ஆண்டு ஜி ஜின்பிங் நீக்கினார். இதன் மூலம் அவர் ஓய்வு பெறும் வரை, அல்லது இறக்கும் வரை அவரே சீனாவை ஆட்சி செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.