சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் Zoom வழியாக கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதியளிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரிடையே ஒரு நம்பிக்கையான கண்ணோட்டம் உள்ளது எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.