தேசிய பொலிஸ் ஆணைக்குழு இன்று கூடுகிறது

தேசிய பொலிஸ் ஆணைக்குழு இன்று (11) கூடவுள்ளது.

பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தலைமையில் பொலிஸ் ஆணைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய சமர்ப்பித்த கோரிக்கை பரிசீலிக்கப்பட உள்ளது.


தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் நியாயமற்றது என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டை இன்று பொலிஸ் ஆணைக்குழு பரிசீலித்து விசாரணைகளை மேற்கொள்ளும் என பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸ் ஆணைக்குழு கூட்டத்தின் இறுதி நாள் இன்று எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.