விஜய் யேசுதாஸ் வீட்டில் கொள்ளை!




பாடகா் விஜய் யேசுதாஸ் வீட்டில் தங்கம், வைர நகைகள் காணாமல் போனதாக அவர் மனைவி பொலிஸில் முறையிட்டதை அடுத்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட போதும் அவர்கள் யாரும் நகையை திருடவில்லையென தெரியவந்துள்ளது.
எனவே ,இது  பொய்யான முறைப்பாடா என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை அபிராமபுரம் மூன்றாவது வீதியில் வசித்து வருகிறார் பாடகர் விஜய் யேசுதாஸ்.
இவரது வீட்டிலலொக்கரில் இருந்த 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி விஜய் யேசுதாஸின் மனைவி தக்ஷனா அபிராமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாா்.
இந்த நிலையில் வீட்டில் பணி செய்த 11 ஊழியர்களிடமும் பொலிஸாா் விசாரணை நடத்தினா்.
அதன் முடிவில் அவர்கள் யாரும் நகைகளை திருடவில்லை என  தெரியவந்துள்ளது.
இந்நிலையில் முறைப்பாடு குறித்து வௌிநாட்டில் உள்ள பாடகர் விஜய் யேசுதாஸை பலமுறை பொலிஸாா் தொடர்பு கொண்டு வினவிய போதும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என சொல்லப்படுகிறது.
மேலும், முறைப்பாட்டை அளித்த விஜய் யேசுதாஸின் மனைவி தக்ஷனாவும் பொலிஸாாின் விசாரணைக்கு சரியான முறையில் விளக்கம் அளிக்கவில்லை என தெரிவிக்கிறது.
திருடுபோனதாக சொல்லப்பட்ட 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மிக பாதுகாப்பான நம்பர் பதிவிடும் லொக்கரில் வைக்கப்பட்டிருந்ததும், அவை உடைக்கப்படவில்லை என்பதும் மேலும் அந்த லொக்கரின் கடவுச்சொல் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது மனைவி தக்ஷனா ஆகிய இருவருக்கு மட்டுமே தெரிந்துள்ளது எனவும் பொலிஸாாின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நகைகள் காணாமல் போனதாக தக்ஷனா கூறியது பெப்ரவாி மாதம் 18ம் திகதி ஆகும்
பொலிஸ் நிலையத்தில் மார்ச் மாதம் 30 ஆம் திகதி முறையிடப்பட்டுள்ளது
எனவே 40 நாட்களாக முறைப்பாடு செய்யாது, 40 நாட்கள் கழித்து முறைப்பாடு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என பொலிஸாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.
இது குறித்து விளக்கம் கேட்டபோது, விஜய் யேசுதாஸின் குடும்பத்தாரிடம் சரியான முறையில் பதில் இல்லை என தொிவிக்கப்படுகிறது.
எனவே நகைகள் திருடு போனதாக பொய்யான முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதா என பொலிஸாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.
இதனையடுத்து குடும்பத்தாரிடம், குறிப்பாக விஜய் யேசுதாஸ் மனைவியிடம் தீவிர விசாரணை நடத்த பொலிஸாா் திட்டமிட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.