பிரான்சில் பாரிய நிலநடுக்கம்

பிரான்சின் மேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பிரான்சின் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கருதப்படும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்தினால் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், பல கட்டிடங்களின் சுவர்களில் வெடிப்புகள் மற்றும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தால் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேபோன்ற நிலநடுக்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரான்சில் ஏற்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.