சர்ச்சைக்குரிய Bupivacaine மயக்க  மருந்து குறித்து அதிரடி முடிவு!
 

நாட்டில் சர்ச்சைக்குரிய Bupivacaine மயக்க மருந்து தொகுதியின் பரிசோதனைகள் நிறைவடையும் வரை, அதனை பாவனையில் இருந்து நீக்கியுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த மருந்துத் தொகுதியை அரசாங்க வைத்தியசாலைகளுக்கு மாத்திரம் விநியோகித்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் S.D.ஜயரத்ன தெரிவித்தார்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிசேரியன், ஹேர்னியா சத்திர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம் சமீபத்தில் பதிவானது.
மயக்கமடையச் செய்வதற்காக Bupivacaine என்ற மயக்க மருந்தினை பயன்படுத்திய பின் அவர்களுக்கு அவ்வாறான நிலைமை ஏற்பட்டதாக பின்னர் தெரியவந்ததுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.