நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் இராஜினாமா

 நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் (Mark Rutte) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வந்து நெதர்லாந்தில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான சட்டமூலத்தை ஆளும் கூட்டணி அரசாங்கம் நிறைவேற்ற முயன்ற நிலையில், கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பிரதமர் இராஜினாமா செய்துள்ளார். 

இதனால், 150 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட நெதர்லாந்தில் விரைவில் தேர்தல் நடைபெறும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புலம்பெயர்ந்தோர் பிரச்சினை நெதர்லாந்து அரசியலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 

முன்னதாக நெதர்லாந்தில் அடைக்கலம் கோரி அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2021 இல் 36,620 ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 47,991 ஆக உயர்ந்தது.

பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் சிரியாவில் இருந்து குடியேறியவர்கள் என நெதர்லாந்து குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. 
இந்த ஆண்டு மே மாதம் வரை 16,097 பேர் நெதர்லாந்தில் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த விண்ணப்பங்கள் 70,000 ஆக இருக்கும் என்று நெதர்லாந்து அரசு மதிப்பிட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.