⏩ அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான திட்ட அறிக்கைகளை தயாரித்து, இப்போதே கேள்விப் பத்திரங்ளைக் கோரத் தொடங்குமாறு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் பிரசன்னவின் அறிவுறுத்தல்கள்...

⏩ பாதியில் நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நிதியமைச்சுடன் கலந்துரையாடி, தேவைப்பட்டால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க அமைச்சரவைப் பத்திரத்தை தயாரிப்பதற்கான வழிமுறைகள்...

⏩ அபிவிருத்தித் திட்டங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்குப் பரிந்துரைத்து, ஆளும் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தவும்...

⏩ முறையாகப் படித்து, பெறப்பட்ட நிதி ஒதுக்கீடுகளுக்கு ஏற்ப அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கவும்...

⏩ அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்த அரச மற்றும் தனியார் துறைகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டுபிடிக்கவும்...
                                                  - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

அடுத்த வருடம் அமுல்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான திட்ட அறிக்கைகளை தயாரித்து இப்போதே டெண்டர் அழைப்புகளை ஆரம்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

பணம் கிடைத்தவுடன் உரிய வேலைத்திட்டங்களை தாமதமின்றி ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நிதியமைச்சகத்துடன் கலந்துரையாடி, தேவைப்பட்டால் அமைச்சரவையில் முன்வைக்க அமைச்சரவைப் பத்திரத்தை தயாரிக்குமாறும் அமைச்சர் செயலாளருக்கு மேலும் பணிப்புரை விடுத்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இன்று (13) கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் உள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

அங்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, புதிய திட்டங்களை ஆரம்பிக்கும் போது அந்தந்த மாவட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களில் கலந்துரையாடி அதற்கான வேலை ஒழுங்கமைப்பு தயாரிக்கப்பட வேண்டும் என்றார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஆளும் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்பதால், அது தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் விமர்சனங்கள் இன்றி சரியான முடிவுகளை எடுக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பல நிறுவனங்கள் உள்ளன. அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்தும் போது அதற்குத் தேவையான அடிப்படைப் பணிகளை அமைச்சின் கீழ் இயங்கும் அந்த நிறுவனங்களே மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார். வெளி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பெருமளவிலான பணத்தை அமைச்சுக்குள்ளேயே வைத்திருக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

அத்துடன், எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பிக்கும் போது, ஒதுக்கப்படும் பணத்திற்கேற்ப அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். குறைந்த பணத்தில் பெரிய அளவிலான திட்டங்களை தொடங்கினால், பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

பணம் விரயமாவது மாத்திரமன்றி பொதுமக்களும் அரசாங்கமும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்கம் தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எனவே, அரசாங்கத்திற்கு சுமை ஏற்படாத வகையில் அரச மற்றும் தனியார் துறைகளை இணைத்து அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

எனவே, அறிவுரைகள் வழங்கிய பிறகும், உரிய ஆய்வு செய்யாமல், அபிவிருத்தி திட்டங்களை தொடங்க வேண்டாம் என்றும் அதிகாரிகளிடம் அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் திரு.டபிள்யு.எஸ்.சத்யானந்தா மற்றும் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


முனீரா அபூபக்கர்
2023.07.13

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.