ஐக்கிய தேசிய கட்சியின் நாளைய செயற்குழுக் கூட்டத்தில் சஜித் அணியும் பங்ககேற்கும்

Rihmy Hakeem
By -
0
ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட தீர்மானம் மிக்க செயற்குழுக்கூட்டம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நாளை (10) நடைபெறவுள்ளது.

இதில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார அவர்களை உறுதிப்படுத்துவற்காக இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் ஆதரவாளர்கள் பலரை செயற்குழுவில் இருந்து நீக்கியதன் காரணமாக சென்ற செயற்குழுக்கூட்டத்தில் பலர் கலந்து கொள்ளவில்லை.

எவ்வாறாயினும் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அளவதுவல தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)