சாய்ந்தமருது நகர சபை அறிவிப்புடன் அண்மையில் வெளியான வர்த்தமானி அறிவித்தலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் உள்ள மேற்படி உள்ளூராட்சி பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு ஒரேயடியாக அனைத்து பிரதேசங்களுக்கும் தீர்வு வழங்கும் நோக்கில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

